×

கஞ்சா விற்பனை செய்த 2 சகோதரர்கள் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அப்பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கைப்பையுடன் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன் (39), பார்த்திபன் (31) எனவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அனகாபுத்தூர் சுடுகாட்டு பகுதியில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்….

The post கஞ்சா விற்பனை செய்த 2 சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Sankar Nagar police ,Anakaptur Shukadu ,Dinakaran ,
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி