×

கோவையில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் புதியதாக கட்டப்படும் கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

கோவை: அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, திருவேங்கடம் என்பவர் ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மேலும் அவர் மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பரசன். ஹே மலதா ஆகியோர் பெயர்களும் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ராஜேந்திரன் என்பவர் கட்டி வரும் கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.  கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில்  கடந்த மார்ச் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.கோவை புதூரில் உள்ள ஜெஆர்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான  இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர்.  ராஜேந்திரன் என்பவர் எஸ்.பி. வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறபடுகிறது. கோவையில் ஜெஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதியதாக வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். துணை ஆணையாளர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு உரிய அனுமதி பெற்று கட்டுப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரனை வளையத்திற்குள் இருக்க கூடிய ஜெஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிவரும் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவையில் அவருக்கு சொந்தமான இடங்களில் எந்த எந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது விசாரணை மேற்கொண்டு அந்தந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். …

The post கோவையில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் புதியதாக கட்டப்படும் கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Govai ,Minister of Local Affairs ,S.S. GP Entrance ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!