×

முத்தையாபுரம் பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்-கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஸ்பிக்நகர் : முத்தையாபுரம் பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி அடுத்துள்ள முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, பாரதிநகர், அபிராமிநகர், சுந்தர்நகர், ஜெஎஸ் நகர், கோவங்காடு, பொட்டல்காடு, பழையகாயல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவ – மாணவிகள், தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் காலை நேரத்திலும், வீடு திரும்பும் மாலை நேரத்திலும் இக்கிராமங்கள் வழியாக ஒரு சில பஸ்களே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக அவர்கள், பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் ெதாங்கியபடியே பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் குறைவாக உள்ள போதும் நடத்துநர் எச்சரிக்கை செய்தும் மாணவர்கள் பேருந்தின் உள்ளே செல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்களில் இவ்வழியாக காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post முத்தையாபுரம் பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்-கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Muttiahpuram ,Dinakaran ,
× RELATED மரத்தில் தூக்கில் தொங்கிய பில்டிங் கான்ட்ராக்டர்