×

நீலாங்கரை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது.: 1.2 கிலோ கஞ்சா,பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல்

சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை’  (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்  தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று (20.07.2022) காலை சுமார் 08.30 மணியளவில் நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, 2வது மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.அதன்பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா வைத்திருந்த பிரகாஷ் (எ) மொக்க கத்தி பிரகாஷ், வ/57, த/பெ.டக்லஸ், எம்.ஜி நகர், 2வது மெயின்ரோடு, வெட்டுவாங்கேணி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூ.3,120/- 1 செல்போன் மற்றும் கைப்பை   பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் கைது செய்யப்பட்ட பிரகாஷ் (எ) மொக்க கத்தி பிரகாஷ் மீது ஏற்கனவே J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் 1 கஞ்சா வழக்கு, 1 அடிதடி வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரகாஷ் (எ) மொக்க கத்தி பிரகாஷ் விசாரணைக்குப் பின்னர், நேற்று (20.07.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்….

The post நீலாங்கரை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது.: 1.2 கிலோ கஞ்சா,பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Neelangarai ,CHENNAI ,Chennai Metropolis ,
× RELATED நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண்...