×

ஆவுடையார்கோவில் அருகே பரபரப்பு புதுமாப்பிள்ளை மர்ம சாவு: கண்டித்து உறவினர்கள் மறியல்

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெரியவீரமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உஷா(22) என்பவருக்கும், அறந்தாங்கியை அடுத்த பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் சுரேஷ்(30) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆடிமாதம் தொடங்கியதால் உஷா அவரது தாயார் வீட்டில் இருந்து வருகிறார;.இந்நிலையில் கடந்த 17ம் தேதி சுரேஷ் தனது மனைவியை பார்ப்பதற்காக மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர; உஷாவின் அண்ணன் உலகநாதன் வெளிநாடு செல்ல இருந்ததால், அவருக்கு பொருள்களை வாங்க உஷா, சுரேஷ், உஷாவின் அம்மா காளியம்மாள் ஆகியோர் அறந்தாங்கி சென்றுவிட்டு, மாலை 4 மணிக்கு உஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து அறந்தாங்கி செல்வதாக சுரேஷ் தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு 8 மணிக்கு மனைவி உஷா சுரேஷை தொடர்பு கொண்டபோது, அவர; காலையில் வீட்டிற்கு வருவதாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுரேஷ் உஷா வீட்டிற்கு சிறிது தொலைவில் உள்ள புளியமரத்தில் உஷாவின் சுடிதார் சாலில் தூக்கிட்டபடி சடலமாக தொங்கினார். இதைப்பார்த்தவர;கள் இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சுரேஷின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது….

The post ஆவுடையார்கோவில் அருகே பரபரப்பு புதுமாப்பிள்ளை மர்ம சாவு: கண்டித்து உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Pudumapillai ,Auduyarkovil ,Aranthangi ,Rajendran ,Periyaveeramangalam Kamarajar town ,Aavudayarkovil ,Pudukottai district ,Usha ,
× RELATED ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி