×

ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம், கெஞ்சயன்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரவீன்குமார்(24), ஜீப் டிரைவர். இவருக்கு 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் ஓட்டு போட்டு விட்டு, மாலையில் தனது நண்பர்களுடன் வண்ணான்துறை பெரியாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற பிரவீன்குமார் மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

The post ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Tags : Pudumapillai ,Gampam ,Ganesan ,Kenjayankulam, Gampam, Theni district ,Praveen Kumar ,Vannanthurai Periyar ,
× RELATED கம்பத்தில் சித்திரை திருவிழா மஞ்சள் நீராட்டம்