×

ஆரணி அருகே 2 திருமணத்தை மறைத்து மாணவியை ஏமாற்றிய ராணுவ வீரர் திருமணத்திற்கு மறுத்து கொலை மிரட்டல்: போக்சோ வழக்கு பதிவு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கேளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (37), ராணுவ வீரர். ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றதால் 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ் 1 மாணவிக்கும் லோகநாதனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டதாம். ஏற்கனவே 2 முறை நடந்த திருமணத்தை மறைத்து  மாணவியிடம் பழகியுள்ளார். விடுமுறையில் வரும்போதெல்லாம், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.இதேபோல் கடந்த மாதம் விடுமுறையில் வந்த லோகநாதனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்வதை மறுத்ததோடு, தன்னுடன் பழகியதை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் எனவும் லோகநாதன் மிரட்டினாராம். அதே நேரத்தில் நடந்த விவரங்கள் மாணவியின் வீட்டிற்கு தெரிந்தால் சிக்கி கொள்வோம் என பயந்த லோகநாதன், விடுமுறை முடிவதற்குள் யாரிடமும் சொல்லாமல் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்….

The post ஆரணி அருகே 2 திருமணத்தை மறைத்து மாணவியை ஏமாற்றிய ராணுவ வீரர் திருமணத்திற்கு மறுத்து கொலை மிரட்டல்: போக்சோ வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Lokanathan ,Kellur ,Kannamangalai District, Thiruvannamalai District ,Jammu and ,Kashmir ,Arani ,Boxo ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது