×

பூந்தமல்லி அருகே மின் கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம்

பூந்தமல்லி:  பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (33). இவர் நேற்று காலை அருகில் உள்ள காலி மைதானத்தின் வழியாக நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய போக்கை கண்டித்து வசந்தகுமாரின் சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நசரத்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பல  பகுதிகளில் மின் கம்பிகள் பழுதடைந்தும், தாழ்வாகவும் காணப்படுகிறது. நேற்று  முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மின் கம்பி அறுந்து  தொங்கியது. இந்நிலையில் வசந்தகுமார் அந்த வழியாக சென்றபோது அவர்  மீது வயர் அறுந்து விழுந்து பலியாகி உள்ளார். மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம், என சரமாரியாக குற்றம்சாட்டினர். மேலும், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதைடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. *2 மீட்டர் வயரில் 4 இடத்தில் ஒட்டுபொதுமக்கள் கூறுகையில், ‘‘செம்பரம்பாக்கத்தில் பல இடங்களில் மின் கம்பிகள் மற்றும் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. சில இடங்களில் மிகவும் தாழ்வாகவும் மின் கம்பிகள் செல்கின்றன. 2 மீட்டர் வயரில் 4 இடத்தில் ஒட்டுப் போட்டு இணைத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மீண்டும் ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்….

The post பூந்தமல்லி அருகே மின் கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Sembarambakkam Bajana Temple Street ,Vasanthakumar ,Volliber ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை