×

ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ். இவரது மகள் ராதிகா (26). இவர் ஆவடி அருகே திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்த நிலையில், அவருக்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ராதிகா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ராம்தாஸ், மகள் தூக்கில் பிணமாக தொங்குவது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சென்று ராதிகா சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர். …

The post ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kakalur Poontota Nagar ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்