×

கள்ளக்காதல் விவகாரம் பாஜ மகளிர் அணி தலைவி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே சிஎன்புரம் நடுவாக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி சரண்யா ரமேஷ் (27). பாலக்காடு மாவட்ட பாஜ மகளிரணி பொருளாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், அவர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் பாலக்காட்டை சேர்ந்த பாஜ பிரமுகரான பிரஜீவ் என்பருடன் தொடர்பு இருந்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். ‘எனக்கும் பிரஜீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.பலமுறை என்னை அவர் கட்டாயப்படுத்தி உடல் ரீதியாக பயன்படுத்தினார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால் என்னை அவர் சமூகத்தில் தவறான பெண்ணாக சித்தரித்தார். என்னுடைய தற்கொலைக்கு பிரஜீவ் தான் காரணம்’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாலக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கள்ளக்காதல் விவகாரம் பாஜ மகளிர் அணி தலைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ramesh ,CNNpuram Naduvakatupalayam ,Palakad, Kerala State ,Saranya Ramesh ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?