×

பாலக்கோடு அருகே வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை மாணவியை தொடர்ந்து மாணவனும் பலி-எலி பேஸ்ட் தின்றதில் அடுத்தடுத்து இறந்தனர்

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் சினேகா(19), பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஜிட்டாண்டஅள்ளி அடுத்த குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் தமிழரசு (18). இவர் தர்மபுரியில் உள்ள ஐடிஐயில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய, பெற்றோர் முடிவு செய்தனர். இதனால், கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய தமிழரசு, சினேகா ஆகியோர், பாலக்கோடு அருகே முருகன் கோயிலில், நண்பர்கள் முன்னிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அலைபாயுதே பட பாணியில், இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.இதையறியாத சினேகாவின் பெற்றோர், அவருக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன், திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதுபற்றி சினேகா, காதலனிடம் தெரிவித்துள்ளார். தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்று எண்ணி பயந்து போன காதல் ஜோடி, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர், தாங்கள் இருவரும் அங்குள்ள முருகன் கோயில் அருகே, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக, பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு, எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கினர். செல்போனில் வந்த தகவலை பார்த்துவிட்டு, இருவரது உறவினர்களும் அலறி அடித்துக் கொண்டு, முருகன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.உடனடியாக இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசுக்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும், சிகிச்சை பலனின்றி, அன்று இரவு இறந்தார். இதுபற்றி பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். …

The post பாலக்கோடு அருகே வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை மாணவியை தொடர்ந்து மாணவனும் பலி-எலி பேஸ்ட் தின்றதில் அடுத்தடுத்து இறந்தனர் appeared first on Dinakaran.

Tags : Palakode ,Palakodu ,Muniyappan ,Kirinili ,Jitandaalli ,Dharmapuri district ,Sneha ,
× RELATED வாகனம் மோதி மூதாட்டி பலி