×

உளுந்தை ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் 28 பேருக்கு நோட்டீஸ்

திருவள்ளூர்: உளுந்தை ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் 28 பேருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் உள்ள ஏரி தாங்கல் பகுதியை அப்பகுதியை சேரந்த சிலர் ஆக்கிரமித்து 24 வீடுகள் மற்றும் 4 கடைகள் என மொத்தம் 28 கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து உளுந்தை ஏரி தாங்கல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தற்போது படிவம் 7ன் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.  எச்சரிக்கை நோட்டீஸ் பெற்றுக்கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் 15 தினங்களுக்குள் மாவட்ட நிர்வாகத்தை நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவே நேரில் வந்து தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் பின் படிவம் 6ன் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். …

The post உளுந்தை ஊராட்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் 28 பேருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Ulundi panchayat ,Tiruvallur ,Uluntai panchayat ,Kadambathur Union ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...