×

கொத்தனார் அடித்து கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர், பிளஸ் 2 படித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இவரது, தந்தை வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். தாய் பாஞ்சாலி உடன் வசித்து வந்தார். அடிக்கடி தாய்க்கும் மகனுக்கும் தகராறு ஏற்படுவதால் விஜய் தனியாக செவிலிமேட்டில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில், நேற்று நீண்ட நேரம் ஆகியும் மகன் என வராத காரணத்தால் அவர் தங்கி உள்ள வீட்டிற்கு சென்று பார்த்து வரலாம் என்று பாஞ்சாலி நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்து விஜய்யின் தாயார் அழுது கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் அறிந்த தெரிவித்தனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்ற கோணத்தில் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்….

The post கொத்தனார் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Mason ,Kanchipuram ,Vijay ,Sevilimedu ,Bricklayer ,
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் 2வது...