×

பிரசாதங்கள் : கீரை வடை

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு  - 2 கப்,
பச்சை மிளகாய்  - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:


*கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
*அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான கீரை வடை ரெடி. திரௌபதி அக்ஷய பாத்திரத்தில் ஒட்டியிருந்த கீரையை கண்ணணுக்கு தந்ததால் அதில் அக்ஷயமாக அன்னம் வந்தது.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்