×

கண்ணமங்கலம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 5ம் தேதி முதல் புனித தீர்த்த குடம், முளைப்பாறி எடுத்து வருதல், முதற்கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பம் ஆகியன நடந்தது.
தொடர்ந்து, நேற்று யாகசாலை பூஜை, தம்பதி சங்கல்பம், நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தது. பின்னர், 8.30 மணியளவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், இரவு ஆன்மிக நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Kannamangalam ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே