- ஸ்ரேயா கோஷல் உருக்கம்
- மும்பை
- ஸ்ரேயா கோஷல்
- எங்களுக்கு
- கோஷல்
- இதயங்கள்
- தில்லி
- கொல்கத்தா
- ஸ்ரேயா கோஷல் உருக்கம்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: சமீபத்தில் ‘ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்’ என்ற தலைப்பில், அமெரிக்காவில் 6 இடங்களில் இசைக்கச்சேரி நடத்திய பாடகி ஸ்ரேயா கோஷல், கடைசியாக டெல்லியில் கடந்த மாதம் 10ம் தேதி இசைக்கச்சேரி நடத்தி முடித்தார். இதையடுத்து கொல்கத்தாவில் வரும் 14ம் தேதியும், துபாயில் வரும் 21ம் தேதியும் இசைக்கச்சேரி நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடக்கவிருந்த இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூர சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைக்கும்போது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கொல்கத்தாவில் நடக்கவிருந்த கச்சேரியை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். நம் நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகிலுள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன்.
எனது இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்’ என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவில் கடந்த மாதம் 9ம் தேதி, பெண் பயிற்சி மருத்து வர் ஒருவர் பணியில் இருந்தபோது, பாலி யல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
The post பெண்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்கிறேன்: ஸ்ரேயா கோஷல் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.