×

நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா

சென்னை: ‘வாகை சூடவா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், இனியா. நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் அவர், புதிதாக நடனப்பள்ளி தொடங்கியுள்ளார். ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில், புதிய நடனப்பள்ளியை சென்னையில் தொடங்கி இருக்கிறார். துபாயிலுள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், இனியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது நடனப்பள்ளியின் தொடக்க விழா நடந்தது.

‘மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள், பிராண்ட் அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், பருவ கால நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஆத்ரேயா நடத்தும்’ என்றார், இனியா. தற்போது அவர் தெலுங்கில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர, மலையாளத்தில் ‘கேங்ஸ் ஆஃப் சுகுமார குருப்’ என்ற படத்திலும், தமிழில் ‘சீரன்’ என்ற படத்திலும் அவர் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.

The post நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Iniya ,Chennai ,Athreya Dance Studio ,Dubai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...