×

அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் கம்பெனி பேருந்து மோதி 20 பேர் காயம்

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தனியார் கம்பெனி பேருந்து, முன்னால் சென்ற கார் மீது மோதியதுடன், வீடு மற்றும் கடைக்குள் புகுந்ததில் மூதாட்டி உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தனியார் கம்பெனிகள் உள்ளன. இங்குள்ள ஒரு கம்பெனி ஊழியர்களை பல்வேறு இடங்களில் இருந்து பஸ்கள் மூலம் ஏற்றி வருவது வழக்கம். அதுபோல் நேற்று ஒரு பேருந்தில் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனிக்கு வந்துகொண்டிருந்தனர். காலை 8.30 மணி அளவில் அத்திப்பட்டு அயப்பாக்கம் சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற காரின் பின்பகுதியில் மோதி வலதுபுறம் இருந்த வீடு மற்றும் குளிர்பான கடையில் மோதிநின்றது. இதில், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி தமிழ்ச்செல்வி (62) மீது கட்டிடம் இடிந்து விழுந்து, அவர் பலத்த காயமடைந்தார். இதுபோல் பேருந்தில் வந்த பெண் ஊழியர்கள், பாதசாரிகள், கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த அம்பத்தூர் தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்க கலக்கத்தில் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.  இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் கம்பெனி பேருந்து மோதி 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ambatore ,Ambathur ,Ambantur ,Dinakaran ,
× RELATED ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற...