×

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அதிகாரி பலியான விவகாரம் உதவி பொறியாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

பெரம்பூர்: ஓய்வு பெற்ற அதிகாரி பலியான விவகாரத்தில் உதவி பொறியாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை சோலைப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(62). மின்சார வாரியத்தில் இருந்து லைன் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் 2 ஆண்டுகளாக மின்சார பழுதுகள் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் சரி செய்ய வரும்போது அவர்களுடன் சேர்ந்து உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் பழைய தலைமைச் செயலக காவல் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சார வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு உதவியாக சென்ற ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்த தலைமை செயலக குடியிருப்பு போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் இயக்கப்பட்டதால் உயிரிழப்பு நடைபெற்று இருக்கலாம் எனவும், அவர் பணி செய்வது ஏ.இ.க்களுக்கு தெரியாது என ஊழியர்கள் கூறியதால் இறந்தவரின் குடும்பத்தாரின் சார்பில் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதன்படி தலைமை செயலக காலனி போலீசார், அலட்சியமாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் என்ற அடிப்படையில் இந்திய தண்டணை சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் கெல்லீஸ் மின்சார வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட 4 மின்சார வாரிய ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் பணி செய்வது ஏ.இ.க்களுக்கு தெரியாது என ஊழியர்கள் கூறியதால் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது….

The post மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அதிகாரி பலியான விவகாரம் உதவி பொறியாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு