×

நேரில் சந்திக்க அனுமதி தாருங்கள் பிரதமர் மோடிக்கு சொப்னா கடிதம்: முக்கிய ரகசியங்களை கூறுவதாக தகவல்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய ரகசியங்களை தெரிவிக்க நேரில் சந்திக்க அனுமதி வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சொப்னா கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். நாளுக்கு நாள் ஒவ்வொரு தகவலாக வெளியிட்டு வரும் சொப்னா பிரதமர் மோடிக்கு சொப்னா திடீரென்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது. இது குறித்து நான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பிறகு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனக்கும், எனது வக்கீலுக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நான் பணிபுரிந்து வரும் பாலக்காட்டில் உள்ள நிறுவனத்திற்கும் கேரள அரசால் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரனுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு உண்டு. அவர் தான் இந்த சம்பவத்தில் என்னை பலிகடா ஆக்கினார். தங்கக் கடத்தல் குறித்து சில முக்கிய ரகசியங்களை விவரங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால் நேரில் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்….

The post நேரில் சந்திக்க அனுமதி தாருங்கள் பிரதமர் மோடிக்கு சொப்னா கடிதம்: முக்கிய ரகசியங்களை கூறுவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sobna ,PM Modi ,Thiruvananthapuram ,Modi ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...