×

ஊரப்பாக்கத்தில் சோகம் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், கம்பர் தெரு, ராம்நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (28). மெக்கானிக். இவருக்கு தந்தை இல்லை. அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இவருக்கு  திருமணம் இன்னும் ஆகவில்லை. இந்நிலையில், மணிகண்டன் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தார். உடனே, படுக்கை அறைக்கு சென்று கதவை வேகமாக சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். இதனை கண்டதும் அவரது அம்மா கதவை தட்டி கூப்பிட்டும் எந்த பதிலும் வரவில்லை, கதவை திறக்கவுமில்லை. இதனால், பதறிப்போன அவரது அம்மா கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையில் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்ற பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்….

The post ஊரப்பாக்கத்தில் சோகம் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gooduvancheri ,Curanakam ,
× RELATED கூடுவாஞ்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை...