×

டிவி சீரியல் நடிகை தற்கொலை: ஒடிசா போலீசார் விசாரணை

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆண் நண்பருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக டிவி சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நயபள்ளி கட்சாஹியில் உள்ள வாடகை வீட்டில் ஒடியா ெமாழி டிவி சீரியல் நடிகை  ரஷ்மிரேகா ஓஜா என்பவர் வசித்து வந்தார். அவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் ஜகத்சிங்பூர் போலீசார், ரஷ்மிரேகா ஓஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நடிகை ரஷ்மிரேகா ஓஜா எழுதிய தற்கொலை குறிப்பு கடிதத்தில் யாருடைய நிர்பந்தத்திலும் தான் சாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.ஆனால், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்பது தற்கொலைக் குறிப்பு கடிதத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மர்ம மரணத்திற்கான காரணம் தெரியவரும். திர்டோல் பகுதியைச் சேர்ந்த ரஷ்மிரேகா, தனது ஆண் நண்பருடன் கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதனால் காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்….

The post டிவி சீரியல் நடிகை தற்கொலை: ஒடிசா போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Rashmireka Ojha ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...