×

எழும்பூரில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் போலீசிடம் கத்திமுனையில் செயின் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். எழும்பூர் பகுதியில் போலீசாக பணியாற்றி வருபவர் பிரியா. இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். போலீஸ்  மெஸ் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில்  எதிரே வந்த 2 பேர், இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பிரியா எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….

The post எழும்பூரில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : elampur ,Chennai ,Elehampur ,Asamis Web ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!