×

பேட்டையில் வாகனம் பழுதாகி நின்ற முதியவருக்கு பெண் காவலர் உதவி: பொதுமக்கள் பாராட்டு

பேட்டை: நெல்லையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேட்டை ரயில்வே கேட் அருகே ஒரு பெண் காவலர் உள்பட 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த முதியவர் ஒருவரது வாகனம் பேட்டை ரயில்வே கேட் அடுத்த வேகத்தடை அருகே திடீரென பழுதாகி நின்றது. இதனால் அவர் பரிதவித்தார். இதை கவனித்த பெண் காவலர் அவசரமாக ஓடிச்சென்று முதியவருக்கு வாகனத்தை இயக்குவதற்கு முயற்சி செய்தார். நீண்ட நேரம் முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆகாததால் அவ்வழியாகச் சென்ற மற்றொருவரிடம் முதியவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர் பைக்கை டோ செய்து இயக்கி சென்றார். பெண் காவலரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்….

The post பேட்டையில் வாகனம் பழுதாகி நின்ற முதியவருக்கு பெண் காவலர் உதவி: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Pettaya ,Pettah ,Nella ,Tamil Nadu ,Governor RN ,Ravi ,
× RELATED சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு