×

சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சித்தூர்: சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. சித்தூர் அடுத்த காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கையும் செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றும் அரசு விடுமுறை என்பதால் வரசித்தி விநாயகரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதி  காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க கோயில் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Chittur ,demonstration ,devotees ,Ganeshapam Vinayagar ,
× RELATED தஞ்சாவூர் அருகே சோழர்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுப்பு