திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் பிரமோற்சவ விழா மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றம் மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காப்பு கட்டுதல், அண்ணன்மார் பூஜை, உச்சி பலி கொடுத்தல், பறை சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் தொடங்கி நடைபெற்று முக்கிய வீதிகளின் வழியாக சென்று நேற்று மாலை தேரடியை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு, விடையாற்றி உற்சவம் போன்றவை நடைபெற்றது. …
The post செல்லியம்மன் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.