×

கொடுங்கையூரில் 3 மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில் 18 வயது இளம்பெண்ணை மிரட்டி 4வது திருமணம் செய்ய முயற்சி: கஞ்சா வியாபாரியுடன் வாலிபர் கைது: 3 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூரில் 3 திருமணத்ைத மறைத்து 18 வயது  இளம்பெண்ணை 4வதாக திருமணம் செய்ய முயன்ற வாலிபர், கஞ்சா வியாபாரியுடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் நூரி (18, பெயர் மாற்றம்). 10ம் வகுப்பு படித்துள்ளார். இவரது வீட்டுக்கு, குடும்ப  நண்பரான தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியை சேர்ந்த ரசூல்கான் (38)  என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் திடீரென  ஒருநாள் ரசூல்கான், ‘நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்று நூரியிடம் கூறியுள்ளார். இதை கேட்டதும் நூரி அதிர்ச்சியடைந்தார். உடனே தனது  தாயாரிடம் கூறினார். அவரும் கடும் ஆத்திரமடைந்தார். ரசூல்கானை அழைத்து, ‘இதுபோன்ற எண்ணம் இருப்பதால் இனிமேல் என் வீட்டு பக்கமே வராதே’ என்று கடுமையாக எச்சரித்தார். இதை ரசூல்கான், சற்றும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு சென்று விட்டார். நாட்கள் உருண்டோடியது. நூரியின் தாய் எச்சரித்ததை ரசூல்கான் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு நூரியை மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த நூரி, கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்கு பதிந்து ரசூல்கானிடம் விசாரித்தார்.இதில் ரசூல்கான் மீது எம்கேபி நகர், கொடுங்கையூர், மணலி உள்ளிட்ட  காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், ஏற்கனவே 3 திருமணம் செய்தவர் என்பதும், 3 மனைவிகளை பிரிந்து தனியாக வசிப்பதும் தெரிந்தது. மேலும், 2020ம் ஆண்டு எம்கேபி நகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ரசூல்கானை இதே இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பிடிக்க முற்பட்டபோது, எம்கேபி நகர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரது கை, கால் உடைந்தது என்பதும் தெரிந்தது. இதையடுத்து, பெண் வன்கொடுமை சட்டத்தின்  கீழ்  வழக்கு பதிவு செய்து, ரசூல்கானை தேடினர்.இன்று காலை கொடுங்கையூர் பகுதியில்,  தனது நண்பரோடு ரசூல்கான் காரில் வருவதாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்  மில்லருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மூலக்கடை  சந்திப்பு அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்தனர்.  அதில் ரசூல்கான், அவரது நண்பரான பிரபல கஞ்சா வியாபாரி செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (எ) கடுக்கா கார்த்திக் (23) ஆகியோர் இருந்தனர். காரில் சோதனை செய்தனர். 3 கிலோ கஞ்சா  இருந்தது. இதையடுத்து, ரசூல்கான், கடுக்கா கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடுக்கா கார்த்திக் மீது கஞ்சா  வழக்கும், ரசூல்கான் மீது பெண் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின்கீழ் வழக்கும் பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை  பறிமுதல் செய்தனர்….

The post கொடுங்கையூரில் 3 மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில் 18 வயது இளம்பெண்ணை மிரட்டி 4வது திருமணம் செய்ய முயற்சி: கஞ்சா வியாபாரியுடன் வாலிபர் கைது: 3 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kodunkaiyur ,Perambur ,
× RELATED தேர்தல் விதி மீறல் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு