×

வள்ளுவர் கோட்டம் அருகே ஓடும்போது திடீர் தீ; பைக் எரிந்து நாசம்: உரிமையாளர் உயிர் தப்பினார்

சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே ஓடும்போது பைக் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் பைக் உரிமையாளர் உயிர் தப்பினார். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் விஜய் என்பவர் தனது இரண்டரை லட்சம் மதிப்புள்ள புதிய ராயல் என்பீல்டு பைக்கில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார். வள்ளுவர் கோட்டம் சாலையில் சென்றபோது திடீரென பைக்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த விஜய் பதற்றத்துடன் தனது பைக்கை சாலையோரம் நிறுத்தினார். அடுத்த சில விநாடிகளில் ராயல் என்பீல்டு பைக்கின் இன்ஜின் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை கொண்டு தீயை கடுமையாக போராடி அணைத்தனர். தீ விபத்து குறித்து பைக் உரிமையாளர் விஜய் அளித்த தகவலின்படி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பைக்கில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. இருந்தாலும், தீ விபத்து குறித்து ராயல் என்பீல்டு நிறுவன ஊழியர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் சிறிது நேரம் வள்ளுவர் கோட்டம் அருகே பரபரப்பு ஏற்பட்டது….

The post வள்ளுவர் கோட்டம் அருகே ஓடும்போது திடீர் தீ; பைக் எரிந்து நாசம்: உரிமையாளர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Sudde ,Valluwar Gotam ,Chennai ,Vuluar Gotam ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...