×

வரத்து குறைவால் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மாட்டு சந்தை நாளின்போது, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.  கடந்த 2 வாரமாக, வெளியூர்களிலிருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் அந்நேரத்தில், கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், மாடு விற்பனை விறுவிறுப்பானது. ஆனால் நேற்று நடந்த சந்தைநாளின்போது, வெளியூர்களிலிருந்து மாடுகள் வரத்து குறைவானது. எருமை மாடுகளை ஓரளவு வரபெற்றது.  மேலும், கேரள வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனை மந்தமானது. இதனால், பெரும்பாலான மாடுகள் குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த வாரம் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் நேற்று, ரூ.1.40 கோடி வரையே வர்த்தகம் நடைபெற்றதாக,  வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post வரத்து குறைவால் மாடு விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Cow Market Day ,Outer District ,States ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...