×

காலடிப்பேட்டையில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் விம்கோ நகருக்கு இடமாற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது கட்டிடம் பழுதடைந்ததாலும், இடவசதி போதுமானதாக  இல்லாததாலும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து பொதுமக்கள்  நலன்கருதி காலடிப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கே.பி. சங்கர் எம்எல்ஏ சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சார்பதிவாளர் அலுவலகம்  திருவொற்றியூர் விம்கோ  நகரில் உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க  தீர்மானிக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, சார்பதிவாளர் தேவன் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து முதல் பத்திரப்பதிவை துவக்கி வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் ராமநாதன், உமாபதி, விஜயராகவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். …

The post காலடிப்பேட்டையில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் விம்கோ நகருக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kalatippet ,Wimco ,Tiruvotiyur ,Tiruvotiyur Kalatippettai ,Kaladipettai ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை சீரானது