×

கன்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ வங்கதேசத்தில் 49 பேர் கருகி பலி: 450க்கும் மேற்பட்டோர் காயம்

தாகா: வங்கதேசத்தில் கப்பல் கன்டெய்னர் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 450க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசத்தின் சிட்டகாங்கில் கடம்ரசூல் பகுதியில், ‘பிஎம் கன்டெய்னர்’ என்ற பெயரில் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கன்டெய்னகர் பயங்கரமாக வெடித்து சிறியது. இதனைத் தொடர்ந்து, தீ இன்னும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால், அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.இந்த தீ விபத்தில் இதுவரை 49 பேர் கருகி பலியாகி உள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். சிட்டகாங், சட்டகிராம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கு கூடும் என்று அஞ்சப்படுகிறது.இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் ஷேக் ஹசீனா, விபத்து நடந்த பகுதியில் உடனடியாக நிவாரண முகாம்களை அமைத்து, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

The post கன்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ வங்கதேசத்தில் 49 பேர் கருகி பலி: 450க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...