×

சார்தாம் யாத்திரையின் போது பஸ் கவிழ்ந்து 22 பக்தர்கள் பலி

டேராடூன்: சார்தாம் யாத்திரைக்கு பக்தர்கள் சென்ற பேருந்து, மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்ததில் 22 பேர் பலியாகினர்.உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்டது. இதில், 22 பக்தர்கள் உடல் நசுங்கி  பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதில் 28 பேர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் உத்தரகாசி மாவட்ட கலெக்டரும், மீட்பு படையினரும்  விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காய மடைந்தவர்களுக்குதலா ₹50,000 நிவாரண உதவித்தொகை அரசு அறிவித்துள்ளது….

The post சார்தாம் யாத்திரையின் போது பஸ் கவிழ்ந்து 22 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Chartam pilgrimage ,Dehradun ,Shartham ,Yamunotri ,Uttarakhand ,Shartham pilgrimage ,Dinakaraan ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ