×

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி :அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனை!!

பியோங்யாங்: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குவாட் உச்சி மாநாடு நடந்தபோது, சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் ஜப்பான் கடல் பகுதியில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. அடுத்த சில மணி நேரங்களில் வடகொரியா ஜப்பானை நோக்கி ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க போவதாக கடந்த வாரம் அமெரிக்கா எச்சரித்தது.இந்நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான ரொனால்ட் ரீகன், தென் கொரியாவுடன்  பிலிப்பைன்ஸ் கடலில் மூன்று நாள் போர் பயிற்சி நடத்தியது. நேற்று முன்தினம் முடிந்தது. அதற்கு மறுநாளான நேற்றே, அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் ஒரே நாளில் 8 விதமான குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா சோதனை நடத்தி உள்ளது. வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனான் பகுதியில் இருந்து, 35  நிமிடங்களுக்கு அடுத்தடுத்து இந்த 8 ஏவுகணைகளும் வீசப்பட்டன. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. வட கொரியாவின் இச்செயலுக்கு அமெரிக்க வழக்கம் போல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 18வது முறை வடகொரியா ஏவுகணைகளை சோதித்துள்ளது.இந்த நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை தென் கொரியா அமெரிக்காவின் உதவியுடன் கிழக்கு கடற்கரையில் இருந்து அடுத்தடுத்து 8 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவும் தென் கொரியாவும் போட்டிப் போட்டு கொண்டு நவீன ஏவுகணைகளை பரிசோதித்து வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. …

The post வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி :அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா 8 ஏவுகணை சோதனை!! appeared first on Dinakaran.

Tags : North Korea ,South Korea ,America ,Pyongyang ,United States ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...