×

வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் நூதன மோசடி: அறக்கட்டளை நிர்வாகி கைது

வேளச்சேரி: அடையாறு, கஸ்தூரிபாய் காலனியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கார்த்தீஸ்வரன் (35). இவருக்கும், செங்கல்பட்டு பகுதியில் அறக்கட்டளை நடத்தி வரும் தாமோதரனுக்கும் (29) கடந்தாண்டு அறிமுகம் ஏற்பட்டது. தாமோதரன் மாத வாடகை ரூ.30 ஆயிரத்திற்கு 4 கார்களை கார்த்தீஸ்வரனிடம் பெற்றுள்ளார். ஆனால், வாடகை தராமல் ஏமாற்றியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அடையாறு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் தாமோதரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, 4 கார்களையும் அடமானம் வைத்து, ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தாமோதரன் நண்பர்களான கருப்பசாமி பாண்டியன், செல்லப்பாண்டியன் ஆகியோரை கடந்த மாதம் கைது செய்தனர். தலைமறைவான தாமோதரனை நேற்று கைது செய்தனர். …

The post வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் நூதன மோசடி: அறக்கட்டளை நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Kartheeswaran ,Kasthuribai Colony, Adyar ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி...