தண்டையார்பேட்டை: வடசென்னையில் வளையல் பெட்டியில் மறைத்து நூதன முறையில் போதைப்பொருள் விற்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜாகிர் உசேன் (52), முகம்மது சுல்தான், (59), நாசர் (55), சுன்னத் (42), அசாருதீன் (39), சித்திக் முகம்மது (34), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரியாஸ் உசேன் (23), மண்ணடியை சேர்ந்த யாசின் மில்பர் (20), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமித் அபிக் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ கேட்டமின் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post ரூ.80 லட்சம் கேட்டமின் பறிமுதல் appeared first on Dinakaran.