×

பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது

சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக பிரமுகர் பாலசந்தர் கடந்த வாரம் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலை சேலம் அருகே கைது செய்தனர். மிக முக்கிய குற்றவாளிகள், நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் 4 பேரை கைது செய்து, அவர்களை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக பாலசந்தர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் கூட்டாளிகள் இருவரை இன்று சிந்தாரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையாளிகளின் கூட்டாளிகளான புளிமூட்டை (எ) தினேஷ் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், புளிமூட்டை (எ) தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட பிரதீப்புடன் சேர்ந்து பாலசந்தரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியை மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். தற்பொழுது மீண்டும் இந்த கொலை வழக்கில் பிரதீப்புடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இவரையும், இவரது சகோதரர் விக்னேஷ் என்பவரையும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   …

The post பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Balachander ,Chennai ,Balachandar ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...