×

பஞ்சப்பள்ளி அருகே சுடுகாடு கேட்டு மறியல்-அதிகாரிகள் சமரசம்

தர்மபுரி : பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பெரியானூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை சாலையோரம் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே அடக்கம் செய்து வருகின்றனர். பலமுறை சுடுகாடு கேட்டு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை மாரண்டஅள்ளி-பஞ்சப்பள்ளி சாலையில் பெரியானூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. …

The post பஞ்சப்பள்ளி அருகே சுடுகாடு கேட்டு மறியல்-அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Panchapalli ,Dharmapuri ,Panchapalli Periyanur ,Palakod ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்