×

4பேர் பலியான கல்குவாரி மூடல் கலெக்டர் தகவல்

நெல்லை:  நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்துள்ள அடைமிதிப்பான்குளம்  கல்குவாரியில் பாறைக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.  இந்நிலையில் அப்பகுதியை  கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார். பின்னர்  அவர் அளித்த பேட்டி: இந்த கல்குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு பாறைகள் விழுந்ததை தொடர்ந்து அதில் சிக்கிய ஆறு பேரை மீட்கும் பணி  நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. 2 பேர்  உயிருடன் மீட்கப்பட்டனர். பலியான 4 பேர் உடல் மீட்கப்பட்டது. விபத்து  நடந்த குவாரியின் அனுமதி மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த குவாரி தற்போது மூடப்பட்டுள்ளது. நெல்லை  மாவட்டத்தில் உள்ள 55 கல் குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் இப்பணி நடைபெறும் என்றார்….

The post 4பேர் பலியான கல்குவாரி மூடல் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Nellai ,Adamithippankulam Kalquari ,Nellai Munneerpallam ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்