நெல்லை: நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்துள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் அப்பகுதியை கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்த கல்குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு பாறைகள் விழுந்ததை தொடர்ந்து அதில் சிக்கிய ஆறு பேரை மீட்கும் பணி நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலியான 4 பேர் உடல் மீட்கப்பட்டது. விபத்து நடந்த குவாரியின் அனுமதி மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த குவாரி தற்போது மூடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல் குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் இப்பணி நடைபெறும் என்றார்….
The post 4பேர் பலியான கல்குவாரி மூடல் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.