×

பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு

சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் அமைப்பினர் மற்றும் ஸ்லீப்பர் செல்கள் மூலம் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ரயில் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்திய உளவுத்துறை வெளியிட்ட தகவலில், ‘பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பஞ்சாப்பில் ரயில் தண்டவாளங்களை தகர்க்க பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில், சரக்கு ரெயில்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக காலிஸ்தான் அமைப்பிற்கும், ஸ்லீப்பர் செல்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தண்டவாளப்பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன….

The post பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Punjab ,Chandigarh ,ISI ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்