×

தமிழ், தெலுங்கில் உருவாகிறது: 1970களில் நடக்கும் கதையில் காளிதாஸ்

சென்னை: தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நிலா வரும் வேளை’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். 2022ல் வெளியான ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தை இயக்கியவர் ஏ.ஹரிஹரன். அவர் இயக்கும் படம்தான் ‘நிலா வரும் வேளை’. படம் குறித்து அவர் கூறியது:இது ஃபிக்‌ஷன் திரில்லர் கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம்.

இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். அதனால்தான் படத்தின் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா இதை இரு மொழி படமாக உருவாக்க முடிவு செய்தார்.

தெலுங்கில் இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மிராக்கிள் மூவிஸ் சார்பில் படம் தயாராகிறது. மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. ஏன் அந்த காலகட்டம் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

The post தமிழ், தெலுங்கில் உருவாகிறது: 1970களில் நடக்கும் கதையில் காளிதாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Kalidas Jayaram ,A. Hariharan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...