×

மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது

கமுதி:  ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிழக்கு அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கு(60). இவரது மகன் வினீத்(25). இவரும் அப்பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரத்தின் 21 வயதான மகளும் காதலித்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம் தனது மகளை காணவில்லை என்று அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அப்போது வினீத், காதலியை அழைத்துச் சென்று வெளியூரில் வைத்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கண்ணாயிரம், வினீத்தின் வீட்டுக்கு சென்று, அவரது தாயார் ராக்குவிடம் மகளை கடத்தி சென்றது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தார். இதுபற்றி அபிராமம் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணாயிரத்தை கைது செய்தனர்….

The post மகளை கடத்தி திருமணம் செய்ததால் மாப்பிள்ளையின் தாய் வெட்டிக் கொலை பெண்ணின் தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Groom ,Kamudi ,Ramanathapuram District, Ramanathapuram District, ,Raku ,East Abhiramam ,Vineeth ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி