- வருணாயிரி
- வட்ருயிரு
- குமாரபட்டி
- கஞ்சபுரம்
- Pudupatti
- பிளிவாக்கல் அணை
- நெடுங்குளம்
- சேதுநாராயணபுரம்
- மகாராஜபுரம்
- மாதுட்
- ரெங்கபாளையம்
- கொட்டாய்யு
- வராயிரி
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம், புதுப்பட்டி, பிளவக்கல் அணை, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், மகாராஜபுரம், மாத்தூா், ரெங்கபாளையம், கோட்டையூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் கோடை நெல் விவசாயம் நூற்றுக்கணக்கான ஏக்காில் நடைபெற்று வருகிறது. தற்போது வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் இயந்திம் மூலம் அறுவடையாகி வருகின்றது. இந்நிலையில் நெற்களங்கள் பல இடங்களில் இல்லாததால் சாலைகளில் நெல்லை போட்டு சாக்குகளில் மூட்டை போடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அனைத்து பகுதிகளிலும் நெற்களங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருவதால் வத்திராயிருப்பு கான்சாபுரம், ராமசாமியாபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசுஉடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்தால் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக அமையும். எனவே இப்பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்….
The post வத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.