×

பைக் – கார் மோதலில் ஒருவர் பரிதாப பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது வி.ஜி.கேபுரம் கிராமம். இங்கு வசிப்பவர் பச்சையப்பன் மகன் குமார் (36). கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை  மகன் நாகராஜ் (39). இவர்கள் இருவரும் பூக்கட்டும் தொழில் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கனகம்மாசத்திரம் திருவாலங்காடு சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குமாருடைய இரண்டு சக்கர வாகனத்தில் குமார், நாகராஜ், உறவினர் மகன் விக்னேஷ் (4) மூவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.பின்னர் கனகம்மாசத்திரம் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். குமாருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. விக்னேஷ், லேசான  காயத்துடன் தப்பிவிட்டர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் சென்னை மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். …

The post பைக் – கார் மோதலில் ஒருவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Kanakammasathram ,VGkepuram ,Pachaiyappan ,Kumar ,Kanakammasatram… ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி...