×

சாலை போட்டதாக பல லட்சம் முறைகேடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவலர் சஸ்பெண்ட்: பிடிஓ பணியில் இருந்து விடுவிப்பு

விழுப்புரம்: தார்சாலை அமைப்பதாக பல லட்சம் முறைகேடு செய்ததாக மயிலம் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனை பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உட்பட்ட கண்ணியம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் தேசிய ஊரக வேலைதிட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் இவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இதுவரை இவ்வளவு தொகை செலுத்தியதில்லையே என்று யோசித்து வந்த நிலையில், பின்னர், அந்த பணத்தை சில நாட்களில் ஊழியர்கள் மூலம் வசூலிக்கப்பட்டதாம். பின்னர்தான் தெரியவந்தது, அந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் தார்சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது.தார்சாலை அமைக்க பயனாளிகள் வேலை செய்ததுபோல் கணக்கு காண்பிக்கப்பட்டு அதற்கான கூலியை பொதுமக்களின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் தார்சாலை அமைக்காமலேயே பணத்தை முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பிடிஓ அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பிடிஓவையும் முற்றுகையிட்டனர். இதுகுறித்து, ஆய்வு செய்திட ஆட்சியர் மோகன், துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில், 640 மீட்டர் தூரம் தார் சாலை அமைக்க ரூ.14.17 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் தார்சாலை அமைக்காமலேயே, சாலை போட்டதாக பல லட்சம் பணத்தை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் செலுத்தி மோசடி செய்துள்ளனர். மீதமுள்ள ரூ.12 லட்சத்தையும் மொத்தமாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட மயிலம் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் வீரம்மாளை சஸ்பெண்ட் செய்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) புருஷோத்தமனை பணியிலிருந்து விடுவிப்பு செய்தும் ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் 2 மாதத்தில் ஓய்வுபெற உள்ளாராம். இந்நிலையில்தான், தார்சாலை ஊழலில் சிக்கியுள்ளார்….

The post சாலை போட்டதாக பல லட்சம் முறைகேடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவலர் சஸ்பெண்ட்: பிடிஓ பணியில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : PTO ,Villupuram ,Mylam ,Deputy District Development Officer ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...