×

சலார் 2ம் பாகத்தில் மாற்றமா? இயக்குநர் பிரசாந்த் நீல் விளக்கம்

ஐதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியானது. படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியது: 6 மணி நேரப் படத்தில் வெறும் 3 மணி நேரம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. கதைக்குத் தேவையில்லாத எந்த ஒரு சிறு கதாபாத்திரத்தையும் நான் சேர்க்கமாட்டேன். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் கதையை பின் தொடர்வது கடினமாக உள்ளது என்கின்றனர். சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறேன். நான் கதையில் தான் கவனம் செலுத்துகிறேன். அந்த நேரத்தில் பார்வையாளர்களுக்கு இது எளிதாக புரியுமா? கடினமாக இருக்குமா? என்பது குறித்தெல்லாம் நான் சிந்திக்க முயற்சிக்கவில்லை. உங்களிடம் இன்னும் பாதி கதையை சொல்ல வேண்டியுள்ளது. முழு கதையையும் பார்த்த பிறகு தான் கதாபாத்திரங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்த விமர்சனங்களால் நான் 2வது பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. ஒரு இயக்குநராக எழுதப்பட்ட கதையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி விவரிப்பது தான் என் வேலை.

The post சலார் 2ம் பாகத்தில் மாற்றமா? இயக்குநர் பிரசாந்த் நீல் விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prashant Neel ,Hyderabad ,Prabhas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்