×

மாணவர்களிடம் செல்போனில் பேசிய நடிகர் பிரபாஸ்

மும்பை: சமீபத்தில் மும்பை ஐஐடி வளாகத்தில், ‘டெக்ஃபெஸ்ட்’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடந்தது. இதில், ‘கல்கி 2898 AD’ படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசத் தொடங்கும்போது, படத்தின் ஹீரோ பிரபாஸை செல்போனில் அழைத்து, மாணவர்களிடம் அவரை உரையாட வைத்தார். பிறகு நாக் அஸ்வின் பேசியபோது,

‘கல்கி 2898 AD’ படத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்களை விவரித்தார். பிரமாண்டமான படைப்பை உருவாக்கும்போது, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் சிக்கலான செயல்முறைகள் குறித்தும், அதை விரிவாக விளக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டில் பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படம், ‘காமிக்-கான்’ல் வெளியானபோது அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று நாக் அஸ்வின் தெரிவித்தார்.

The post மாணவர்களிடம் செல்போனில் பேசிய நடிகர் பிரபாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Actor ,Prabhas ,MUMBAI ,Asia ,TechFest ,IIT ,Nag Ashwin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!