×

பொள்ளாச்சி அருகே கொடூரம் சிறுவனின் உடலில் 10 இடங்களில் சூடு வைத்த தாய்-குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை

ஆனைமலை : ஆனைமலை அருகே சிறுவனின் உடலில் 10 இடங்களில் சூடு வைத்த தாய் குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய பெண் அதே பகுதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்த நிலையில் அந்த பெண் பொள்ளாச்சியை சேர்ந்தவரை 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.முதல் கணவர் மற்றும் 2வது கணவர் மூலம் பிறந்த குழந்தைகளுடன் அந்த பெண் வசித்து வருகிறார். முதல் கணவருக்கு பிறந்த மகனுக்கு 10 வயது ஆகிறது. அவர் பள்ளிக்கு செல்லாமலும், தாய் பேச்சை கேட்காமலும் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மகன் என்றும் பாராமல்  பழக்க காய்ச்சிய கம்பியில் உடல் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்தினார். இதில் சிறுவனின் உடலில் பல இடங்களில் தோல் உரிந்து தசை  சிவந்து ரணமாக காட்சி அளித்தது.அக்கம் பக்கத்தினர் இது குறித்து  குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலின்  தலைமையிலான அதிகாரிகள் சிறுவனை மீட்டு கோவையில் உள்ள ஒரு காப்பத்தில் ஒப்படைத்தனர். இன்று (30ம் தேதி)  சிறுவனின் தாயிடம் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கொடூர தாயின் இந்த செயல் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது….

The post பொள்ளாச்சி அருகே கொடூரம் சிறுவனின் உடலில் 10 இடங்களில் சூடு வைத்த தாய்-குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Animalai ,Mother-Child Welfare Officers ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...