×

வேடசந்தூர் அருகே அச்சுறுத்திய தண்ணீர் தொட்டி அகற்றம்

வேடசந்தூர்: வேடசந்தூர் ஒன்றியம், பாலப்பட்டி ஊராட்சி நாகமநாயக்கனூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருந்து வந்தது. இத்தொட்டி பழுதடைந்ததால், இதனை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கைவிட்டு புதியதாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் ெதாட்டி கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் பயன்பாடின்றி இருந்த தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி திடீரென இடிந்து விழுந்து தொட்டிக்குள்ளும், சில கான்கிரீட் கற்கள் அருகிலிருந்த வீட்டின் மீதும், பால்வாடி மீதும் விழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து இத்தொட்டியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று வேடசந்தூர் ஒன்றிய அலுவலக அதிகாரிகள், சேதமடைந்து இருந்த தண்ணீர் தொட்டியை அகற்றினர். அதன்பின்பே இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்….

The post வேடசந்தூர் அருகே அச்சுறுத்திய தண்ணீர் தொட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,Vedasanthur Union ,Balapatti Navratshi Nagamanayakkanur ,Vadasanthur ,Dinakaran ,
× RELATED குடும்பம் நடத்த பாட்டில் பொறுக்கும் சினிமா நடிகர்