×

சிசிடிவி கேமராவிலே உருவான வித்தியாசமான படம்

 

பெங்களூரு: உபேந்திராவின் மனைவி பிரியங்கா, சினிமாவில் முதல் முறையாக முழுவதும் சிசிடிவி கேமராவில் படமாக்கப்பட்ட படத்தை தயாரித்து நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படமாக இது இருக்கும் என்றும் பிரியங்கா ெதரிவித்துள்ளார். பல மொழிகளில் வெளியாகும் இந்த படத்துக்கு கேப்ச்சர் என தலைப்பு வைத்துள்ளனர். நாவல்களை படமாக்குவதற்காக பெயர் பெற்ற இயக்குனர் லோஹித்.ஹெச் படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து படத்தை பிரியங்கா தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி படத்தை வழங்குகிறார். சிவராஜ்குமாரின் டகரு படத்தில் நடித்த மன்விதா காமத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் கிருஷ்ணராஜ் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.
இந்த படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

The post சிசிடிவி கேமராவிலே உருவான வித்தியாசமான படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bengaluru ,Upendra ,Priyanka ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நேபாள துணை பிரதமர் உபேந்திரா ராஜினாமா