×

மார்வாடி பெண் கொலை வழக்கில் திருப்பம் மருமகளே கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பத்தே சந்த் (78). திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரேம் கன்வர் (70). இவர்களது மூத்த மகன் கணபதி லால் (51), குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். 2, 3வது மகன்கள் சுனில் லால் (47), பிண்டுகுமார் (44) ஆகியோருக்கு திருமணமாகி, அதே பகுதியில் வசிக்கின்றனர். கடைசி மகன் கமலேஷ்குமார் (40) பெற்றோருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை பத்தே சந்த், மகன்கள் சுனில் லால், பிண்டுகுமார் ஆகியோர் கடைக்கு சென்றனர். பிரேம் கன்வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணியளவில் பத்தே சந்த் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் பிரேம் கன்வர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, 3வது மகன் பிண்டுகுமாரின் மனைவி சுஜாதாவிடம் (27) விசாரித்தபோது,  முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகத்தின்பேரில், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: எங்களது குடும்பத்தில் 2 மூத்த மருமகள்கள் மீது, என் மாமியார் பாசம் காட்டுவார். என் மீது கோபப்படுவார். காரணம், அவர்கள் அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள், நான் பீகாரை சேர்ந்தவள். மார்வாடியில் வேறு பிரிவை சேர்ந்தவள்.  மேலும், ஏழை குடும்பத்தை  சேர்ந்தவள் என்பதால் மாமியார் என்னை அடித்து துன்புறுத்துவார். அவரது சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதுபற்றி, பீகாரில் வசிக்கும் எனது மாமா மகன்கள் சுமித், தீபக் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்களுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சுமித், தீபக் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தேன்.பின்னர், திட்டமிட்டபடி வீட்டில் யாரும் இல்லாதபோது, சுமித், தீபக் ஆகியோரை வரவழைத்து பிரேம் கன்பவரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர், உறவினர்கள் தப்பிச் சென்றனர். மர்ம நபர்கள் தனது மாமியாரை கொலை செய்து விட்டு, தன்னையும் தாக்கியதாக என்று கூறிஅனைவரையும் நம்ப வைக்க முயன்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.  இதையடுத்து, சுஜாதாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 2 பேரை  தேடி வருகின்றனர்….

The post மார்வாடி பெண் கொலை வழக்கில் திருப்பம் மருமகளே கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Tirupam ,Ambalam ,CHENNAI ,Pathe Chand ,Thirukkalukkunram Mettu Street ,Chengalpattu ,Thirukkalukkunram Bazar Road.… ,
× RELATED வாலிபரை காலால் மிதித்து கொன்ற அதிமுக...